Ashwin : இவரால் ராகுல் மற்றும் கெயில் போன்று ஹிட் செய்ய முடியும் – அஸ்வின்

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்

raviashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.

Ashwin

- Advertisement -

இதற்காக இரு அணிவீரர்களும் மொஹாலி மைதானத்தில் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டனான ரவிச்சந்திரன் அஸ்வின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது : பஞ்சாப் அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என்றே கூறுவேன். துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். மேலும் பந்துவீச்சிலும் எங்கள் அணி சிறப்பாகவே உள்ளது. எங்களது கடைசி போட்டியில் ராகுல் மற்றும் சர்பிராஸ் கான் ஆகியோரது ஆட்டம் விமர்சிக்கப்பட்டது.

Prithivi

ஆனால், அதுகுறித்து நான் எதுவும் கவலை படவில்லை. ஏனெனில் அனைத்து வீரர்களும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் குறைந்த ஆடுகளத்தில் அதிரடியாக ஆட சிரமப்படுவார்கள். அதுபோன்று கடைசி போட்டியில் சர்பிராஸ் சிறிது கஷ்டப்பட்டார். இருப்பினும், அந்த போட்டியில் அவர் சிறப்பாகவே விளையாடினார்.

- Advertisement -

Sarfaraz

சர்பிராஸ் கான் 21 வயதே ஆகும் இளம் வீரர். அவரிடம் பல திறமைகள் உள்ளது, மேலும் அவரிடம் பலமாக ஹிட் செய்யும் திறமையும் உள்ளது. அவர் நிச்சயம் இந்த தொடரில் ஜொலிப்பார். தற்போதுவரை இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த பஞ்சாப் வீரரும் சர்பிராஸ் தான் என்று அஸ்வின் கூறினார்.

Curran

இதுவரை பஞ்சாப் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் நேரடியாக 3 ஆவது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement