இந்த விஷயத்துக்கு நான் என்ன பதில் சொல்வதுன்னு தெரியல – ரோஹித் சர்மா குறித்து மனம்திறந்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மொகாலியில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsSL cup

- Advertisement -

இந்த முதல் போட்டியை மூன்று நாட்களில் வெற்றி பெற்ற இந்திய அணி பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. அதோடு இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் குறித்து பாராட்டி பேசிய ரோகித் சர்மா இந்தப் போட்டியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் வெற்றிக்கு மிகவும் முக்கிய பங்கினை ஆற்றினார்கள் என்று பாராட்டி இருந்தார்.

அதோடு இந்திய அணிக்காக அஷ்வின் நீண்டகாலமாக விளையாடி வருகிறார். பல்வேறு போட்டிகளை இந்திய அணிக்காக அவர் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். என்னை பொறுத்தவரை அவர் “ஆல் டைம் கிரேட் பிளேயர்” என்று ரோஹித் மனதார பாராட்டி இருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

ashwin 1

அஸ்வின் உண்மையில் சிறந்த வீரர் தான். அவர் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் பலர் மத்தியிலும் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை அஸ்வின் மிகச்சிறந்த வீரர் என்று பேசியிருந்தார். இந்நிலையில் ரோஹித்தின் இந்த பாராட்டு குறித்து தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த அஸ்வின் கூறுகையில்:

- Advertisement -

ரோகித்திடம் நான் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. பாராட்டுகளை பெறுவதில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். உண்மையில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். மொஹாலியில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அரைசதம் விளாசிய அஸ்வின் பந்து வீச்சிலும் 6 விக்கெட் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட்: பிங்க் டெஸ்ட் வரலாறு, பெங்களூரு மைதானம் எப்படி, புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நாளை மார்ச் 12 ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement