Ashwin : தோல்விக்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணம் – அஸ்வின் குற்றச்சாட்டு

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Karthik

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. குரான் 24 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார், பூரான் 27 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

- Advertisement -

பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.அதிகபட்சமாக சுபமான் கில் 49 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Gill

இந்த போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் பிளேஆப் செல்லும் வாய்ப்பை பஞ்சாப் அணி பறிகொடுத்தது. இதன்பின் பேசிய அஸ்வின் கூறியதாவது : எங்கள் அணி தொடரின் துவக்கத்தில் சிறப்பாகவே ஆடிவந்தது. இருப்பினும் பின்னர் வந்த போட்டிகளில் வெற்றிக்கான பாதையை தவறவிட்டோம்.

மேலும், எங்கள் அணியில் ராகுல் மற்றும் கெயில் ஆகியோர் மீது பலமான நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்கள் இருவரும் இந்த போட்டியில் ஏமாற்றிவிட்டார்கள். பூரான் மற்றும் குரான் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement