Ashwin : இளம் வீரராக இருந்தாலும் கடைசி வரை களத்தில் இருந்து எங்களை வீழ்த்தி விட்டார் – அஸ்வின்

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Karthik

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. குரான் 24 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார், பூரான் 27 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.அதிகபட்சமாக சுபமான் கில் 49 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Gill

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : இந்த மைதானத்தில் நாங்கள் நிர்ணையித்த இலக்கு போதுமானது என்றே நான் நினைக்கிறன். ஏனெனில் இதற்கு முன் 175-180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் வெற்றிபெற்று உள்ளோம். ஆனால், இந்த போட்டியில் இரண்டாவதாக பனிப்பொழிவு நிறைய இருந்தது மேலும், கொல்கத்தா அணி வீரர்கள் அருமையாக பேட்டிங் செய்தார்கள்.

Karthik 1

துவக்கத்தில் கில் மற்றும் லின் சிறப்பாக ஆடினார்கள். இடையில் உத்தப்பா மற்றும் ரசல் அணிக்கு தேவையான வேகத்தில் ஆடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் கார்த்திக் முடித்து வைத்தார், கில் நன்றாக ஆடுகிறார். இளம் வீரராக இருந்தாலும் முதிர்ச்சியுடன் ஆடி இறுதிவரை களத்தில் இருந்து எங்கள் அணியை தோற்கடித்தார். எங்கள் அணியில் குரான் அருமையாக விளையாடினார். அவரால் அணிக்கு தேவையான நேரத்தில் எதுவேண்டுமானாலும் செய்ய முடிகிறது என்று அஸ்வின் கூறினார்.

Advertisement