தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. கதவை மூடி அழுத அஷ்வின் – அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல்

Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடித்த ஐந்தாவது போட்டியோடு சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடிய 14-வது இந்திய வீரராக சாதனை நிகழ்த்தினார். அதோடு அந்த போட்டிக்கு முன்னதாக 500 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் அஸ்வின் சமூக வலைதளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் தனது தந்தையுடன் நடைபெற்ற ஒரு வாக்குவாதம் குறித்த சில கருத்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஒருமுறை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதா? அல்லது வேலைக்கு செல்வதா? என்ற கேள்வி எனக்குள் வந்தது. அந்த சமயம் வீட்டில் ஒரு பிரச்சனையும் இருந்தது.

அப்போது நான் எனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்படி நடைபெற்ற அந்த வாக்குவாதத்தில் எனது தந்தை சில கடுமையான வார்த்தைகளை கூறவே நான் அதை நினைத்து அழுது கொண்டே இருந்தேன். குறிப்பாக என் அப்பா ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டி பேசியபோது வீட்டில் ஒரு பெரிய பிரச்சனையை வெடித்தது.

- Advertisement -

அப்போது நான் என் தந்தையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அதனை தொடர்ந்து அவரும் “நீ மிகவும் நேர்மையாக இருக்கிறாய்”, “உன்னால் எதையும் சரியாக செய்ய முடியவில்லை” என்றார்.

இதையும் படிங்க : 15 வருஷ கனவை பார்த்தேன்.. வீடியோ காலில் விராட் கோலி சொன்ன வாழ்த்து செய்தி பற்றி மந்தனா பேட்டி

நான் எப்போதுமே உணர்ச்சிவசப்படக் கூடிய நபர் இல்லை ஆனாலும் எனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கதவை சாத்திக்கொண்டு அழுதேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement