CSK vs KXIP : சென்னை மைதானத்தில் இதனைசெய்வது என்பது இயலாத காரியம் – அஸ்வின்

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

Dhoni 1

- Advertisement -

அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.

அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Harbhajan

போட்டி முடிந்த பிறகு தோல்வி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் இறுதியில் இலக்கினை எட்டுவது குறித்து தவறான கணக்கினை செய்துவிட்டோம். இருப்பினும், ராகுல் மற்றும் ஷ்ர்பிராஸ் நன்றாக ஆடினார்கள். மேலும், கெயில் மற்றும் குரான் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக ஆடிவருகிறார்கள். வெற்றி கைக்கு வந்து போவது சற்று கடினமாக உள்ளது.

CSKShop

அதுமட்டுமில்லாது சென்னை மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்துவது என்பது கடினம். பல வருடங்களாக சென்னை அணிக்காக ஆடியவன் நான் அதனால் இதனை சொல்கிறேன். சென்னை அணி பல ஆண்டுகளாக சாய்க்க முடியாத அணியாக சென்னை மைதானத்தில் வலம் வருகிறது. சென்னை அணிக்கும் எனக்கும் இருக்கும் பிணைப்பு ரொம்ப உணர்வு பூர்வமானது. இருப்பினும், பஞ்சாப் அணிக்காக வெற்றியை பெற விரும்புகிறேன் என்றுகூறினார்.

Advertisement