25 இன்னிங்ஸ்ல இது 12 ஆவது முறை.. ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கபில் தேவை – சமன் செய்த அஷ்வின்

Kapil-Dev-and-Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 246 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சிறப்பான பேட்டிங் காரணமாக தங்களது முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது.

இதன் காரணமாக தற்போது 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் நிகழ்ச்சியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இரண்டாவது இன்னிங்சின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்ஸை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 25-வது இன்னிங்ஸ்களில் ஸ்டோக்ஸ்ஸிற்கு எதிராக பந்துவீசியுள்ள அஷ்வின் அவரை 12 ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : 21 டெஸ்ட் 2018க்குப்பின்.. சுழல் பூமியில் சாதித்து திருப்பி அடிக்கும் போப்.. போராடும் இங்கிலாந்து.. நெருக்கடியில் இந்தியா?

மேலும் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட வீரரை அதிக முறை வீழ்த்தியவர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த கபில் தேவை அவர் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கபில் தேவ் அவர்கள் முடாசர் நாசர் என்பவரை 12 முறை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து அஷ்வின் அவர்கள் பென் ஸ்டோக்ஸ்ஸை 12 ஆவது முறையாக இன்று வீழ்த்தியுள்ளார்.

Advertisement