அஷ்வினுக்கு ஆப்புவைத்த பஞ்சாப் அணி நிர்வாகம். புதிய கேப்டனாக ராகுலுக்கு வாய்ப்பு – வெளியான புதுதகவல்

raviashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மற்றும் தமிழக கிரிக்கெட் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த இரண்டு வருடங்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Ashwin

- Advertisement -

அஸ்வின் இதுவரை ஐபிஎல் தொடரில் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம் வரும் அடுத்த ஆண்டு வரும் ஐபிஎல் தொடரில் அஸ்வினை கேப்டன் பதவியில் இருந்து நீக்க உள்ளது. அதன் காரணம் யாதெனில் கடந்த தொடரில் பஞ்சாப் அணியில் சுற்றுடன் வெளியேறியது.

மேலும் டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டதும் அந்த அணி சிறப்பாக ஆடியது. அதனைப் போன்றே ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஸ்மித் நியமித்த பிறகு சிறப்பாக ஆடியது.

Ashwin

அதனைப் போன்றே தற்போது பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமித்தால் அணி சிறப்பாக விளையாடும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இதனால் அஸ்வினுக்கு பதிலாக புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement