முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப். கொல்கத்தா அணியின் அதிரடி தொடருமா ?

Ashwin
- Advertisement -

இன்று இரவு 8 மணிக்கு துவங்கிய 6ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சில நிமிடத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ளது.

Kxip

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின். அதன்படி முதலில் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் 4 வீரர்களை மாற்றியுள்ளது அந்த அணி. ஆனால், கொல்கத்தா சார்பில் எந்த மாற்றமும் இல்லை கடைசி போட்டியில் ஆடிய அந்த அணியே ஆடுகிறது.

- Advertisement -

கொல்கத்தா அணி கடைசியாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் லின், நரேன், தினேஷ் கார்த்திக், கில் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் உள்ளனர். இவர்களின் அதிரடியை இன்று பஞ்சாப் அணி தடுக்குமா என்று இன்னும் சிறிது நேரத்தில் தெரியும்.

Kkr

மேலும் பஞ்சாப் அணியில் ராகுல், கெயில் மற்றும் மில்லர் போன்ற அதிரடி வீரர்கள் பஞ்சாப் அணியிலும் உள்ளனர். எனவே இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

Advertisement