விஜய் ஷங்கரை சப்பையாக நினைத்து சிம்பிளான பிளான் போட்டு தூக்கிய பஞ்சாப் வீரர் – என்ன ஸ்கெட்ச்ன்னு பாருங்க

Arshdeep-singh
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 43வது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தார்.

KXIPvsSRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 32 ரன்களும், ராகுல் 27 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் இறுதிகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக வார்னர் 35 ரன்களையும், விஜய்சங்கர் 26 ரன்களையும் குவித்தனர். இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது மட்டுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kxip

இந்தப் போட்டியில் எளிதாக சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நேரத்தில் பஞ்சாப் அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது .இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய அர்ஷ்தீப் சிங் கூறுகையில் : விஜய் சங்கர் விக்கெட் வீழ்த்தியது முக்கியமான ஒரு விக்கெட் என்று தெரிவித்துள்ளார்.

Shankar

மேலும் அவருக்கு எதிராக எனது திட்டம் மிகவும் சிம்பிளானது தான். அவரை அடிக்க விட்டு பெரிய சைடில் ஷாட் ஆட வைக்க வேண்டும் என நினைத்தேன். ஏனெனில் மைதானத்தில் பெரிய பக்கத்தில் அவரால் பெரிய ஷாட் ஆடும் போது அது கேட்ச் ஆகும் என்று தான் நினைத்தேன் இப்படியே அவரது விக்கெட்டையும் வீழ்த்தினேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement