பெருமையாக உள்ளது ஆனால்! விராட் கோலி கேப்டன்ஷிப் விலகல் குறித்து – அனுஷ்கா சர்மா உருக்கமான கருத்து

Anushka-1
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வெற்றிகரமான கேப்டனாக விளங்கி வந்த விராட் கோலி திடீரென அந்த பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். 2014 முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக இருந்து வந்த அவர் 7வது இடத்தில் இருந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர். எதிரணிக்கு அடிபணியாமல் உலகின் எந்த மூலையிலும் வெற்றி பெறும் அளவுக்கு இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த அணியாக மாற்றியதால் அவரின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

kohli

- Advertisement -

அனுஷ்கா சர்மா:
விராட் கோலியின் இந்த முடிவு பற்றி சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் என உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் கண்ட மகத்தான கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய தேசிய கிரிக்கெட்டுக்காக கேப்டனாக அளப்பரிய பங்காற்றி பல சாதனைகளை செய்து விடை பெற்றுள்ள விராட் கோலியின் முடிவு பற்றி அவரின் மனைவி அனுஷ்கா சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பெருமை அடைகிறேன்:
இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கத்துடன் கூடிய மிக நீண்ட பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “2014 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி ஓய்வு பெற்றதால் என்னை கேப்டனாக நியமித்துள்ளார்கள் என நீ கூறியது இன்னும் எனக்கு நினைவு உள்ளது. அந்த நாளில் பிற்பகுதியில் உனது தாடியில் நரைமுடிகள் அதிகமாக வருவதை நினைத்து நீ நான் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் பேசி மகிழ்ந்தோம். அந்த நாள் முதல் உனது தாடி அதிகம் வெள்ளையாவதை பார்த்தேன்,

ret

அப்போது முதல் உன்னையும் உன்னை சுற்றியும் அபரித வளர்ச்சியையும் பார்த்தேன். உனது வளர்ச்சியில் உனது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி எட்டிய வளர்ச்சியையும் சாதனைகளையும் எண்ணி பெருமை அடைகிறேன். இருப்பினும் உனக்குள் நீ எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளாய் என்பதை நினைத்து மேலும் பெருமை அடைகிறேன், 2014இல் நீ மிகவும் இளைஞனாக இருந்தாய்”

- Advertisement -

என தெரிவித்த அனுஷ்கா சர்மா 2014 முதல் தற்போது வரை விராட் கோலியின் வளர்ச்சி மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்காக செய்த சாதனைகளை நினைத்து மனதார பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

anushka

உருகிய அனுஷ்கா சர்மா:
“களத்தில் உன்னால் முடிந்த முழுமூச்சுடன் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் அணியை தலைமை தாங்கினாய். ஆனால் ஒருசில தோல்விகளின் போது என்னால் இன்னும் ஒரு சிலவற்றை சிறப்பாக செய்திருக்க முடியும் என்ற வகையில் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த உன்னை உன் அருகே அமர்ந்து பார்த்தபோது வியந்து போனேன். வழக்கத்திற்கு மாறாகவும் நேர் கோட்டில் நடப்பது தான் நீ, அதைத்தான் மற்றவர்களிடமிருந்து நீயும் எதிர்பார்த்தாய். உன்னைப்பற்றி கண்களால் பார்க்காத அம்சங்களை தெரிந்து கொண்டவர்கள் உண்மையாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

- Advertisement -

நீ எப்போதும் கச்சிதமானவன் கிடையாது, உன்னிடம் சில குறைகள் இருந்தது ஆனால் அதை எப்போதாவது நீ மறைக்க நினைத்தாயா? எப்போதும் கடினமானவற்றை சரியானவற்றை செய்வதற்காக உயர்ந்து நின்றாய். எப்போதும் நீ பேராசையான இடத்திற்கு நின்றதில்லை இப்போதும் கூட அதில் நிற்கவில்லை என்பது எனக்கு தெரியும். நீ என்னுடைய அளவுகடந்த எல்லையில்லா அன்பானவன். இந்த 7 வருடங்களாக கற்றுக்கொண்ட பாடங்களை தந்தையாக நமது குழந்தை பார்ப்பாள், நீ நல்லதையே செய்துள்ளாய் !”

anushka

என உருகிய மனதுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனுஷ்கா சர்மா எதிர்பாராத ஒரு சில போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தபோது விராட் கோலி பலமுறை கலங்கிய கண்களுடன் காணப்பட்டதாகவும் அதை வைத்து இந்தியா மீது அவர் வைத்துள்ள பாசத்தையும் நேசத்தையும் பார்த்து வியந்து போனதாக கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அப்போது முதல் விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தில் ஒரு முக்கிய குடும்ப உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : திடீரென குட் பை சொன்ன விராட் கோலி! அடுத்த டெஸ்ட் கேப்டனாக தகுதியான – 4 வீரர்கள் இதோ

கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு “வாமிகா” என பெயரிட்டுள்ள விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒட்டு மொத்தமாக விலகி உள்ளதால் இனி குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தை செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement