அதையும் செய்ய வாழ்த்துகிறேன்.. தனது வாழ்நாள் சாதனையை சமன் செய்த அஷ்வினை பாராட்டிய கும்ப்ளே

Anil Kumble 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 192 ரன்களை இந்தியா சேசிங் செய்து வருகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122*, ஓலி ராபின்சன் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன் பின் களமிறங்கிய இந்தியா தடுமாற்றமாக விளையாடி மிகுந்த போராட்டத்திற்கு பின் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73, துருவ் ஜுரேல் 90 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பசீர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் அட்டகாசமான பந்து வீச்சில் 145 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

வாழ்த்திய கும்ப்ளே:
அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் சேசிங்கை துவங்கிய இந்தியா 3வது நாள் முடிவில் 40/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருப்பதால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் தம்முடைய கேரியரில் 35வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். சொல்லப்போனால் கும்ப்ளே 132 போட்டிகளில் எடுத்த 35 ஐந்து விக்கெட்டுகளை அஸ்வின் 99 போட்டிகளிலேயே எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தம்மை விட வருங்காலங்களில் அஸ்வின் அதிக 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே மனதார பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இது அஸ்வினிடமிருந்து நல்ல முயற்சி. இந்தத் தொடரில் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற பேச்சுக்கள் இருந்தது”

இதையும் படிங்க: 338 ரன்ஸ் 9 விக்கெட்ஸ்.. நடப்பு சாம்பியன் புஜாரா அணியை வெளியேற்றிய தமிழ்நாடு.. 7 வருடம் கழித்து சாதித்தது எப்படி?

“ஆனால் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடிய இன்றைய முக்கியமான நாளில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 35 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள அபாரமான சாதனையும் அஸ்வினை நோக்கி வந்துள்ளது. என்னுடன் அவர் இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்டிப்பாக அவர் இதையும் தாண்டி செல்வார் என்று என்னால் சொல்ல முடியும். இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட உள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்”என்று கூறினார்.

Advertisement