ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அந்த அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 முறை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாமல் தோற்றது.
அதற்கு அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமாக அமைகிறது. அவர்கள் ஆரம்பத்திலேயே தடுமாறுவதால் கொல்கத்தாவின் ஃபினிஷர்கள் ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங் ஆகியோராலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. குறிப்பாக காட்டுத்தனமாக அடிக்கக்கூடிய ரசல் இந்த வருடம் இதுவரை ஒரு போட்டியை கூட ஃபினிஷிங் செய்யவில்லை.
ரசலும் மனிதன்:
அதனால் ரசல் போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாட வேண்டும் என்று கடந்த போட்டியின் முடிவில் கேப்டன் ரஹானே கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் கடைசி நேரத்தில் வந்து ஓவருக்கு 17 – 20 ரன்களை அடித்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்க ரசல் மெஷின் கிடையாது மனிதர் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும் கொல்கத்தா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால் ரசல் வரும் போதெல்லாம் போட்டி முடிந்து விடுவதாக கும்பளே கூறியுள்ளார்.
இதை சமாளிக்க ரசல் மேலே களமிறங்க வேண்டுமென்று அறிவுறுத்தம் கும்ப்ளே இது பற்றி பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா ரசலை சிறப்பாக பயன்படுத்துகிறது என்று நான் நினைக்கவில்லை. அவர் மேலே பேட்டிங் செய்ய வேண்டும். அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். பஞ்சாப்புக்கு எதிராக தோல்வியை சந்தித்த போட்டியைப் பாருங்கள்”
கும்ப்ளே அட்வைஸ்:
“அந்தப் போட்டியில் அவர் முன்னதாகவே வந்து ஃபினிஷிங் செய்திருக்க வேண்டும். ஒருவேளை முதல் பந்திலேயே அவுட்டானாலும் பிரச்சனை இல்லை. உங்களிடம் விக்கெட்டுகள் கையில் இருக்கும். ஆனால் ரசல் களத்திற்கு வரும் போதெல்லாம் பவுலர்களுடன் பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். மேலும் அவர் வரும் போது போட்டி கிட்டத்தட்ட முடிந்து விடுகிறது”
இதையும் படிங்க: 14 ஒய்ட்.. உங்க தப்பை மறைக்க அவங்கள குறை சொல்லாதீங்க.. ராஜஸ்தான் பராக்கை சாடிய சேவாக், மிஸ்ரா
“ஏனெனில் அவர் வரும் போது ஓவருக்கு 17 – 18 ரன்கள் தேவைப்படுகிறது. அதை 20 அல்லது 10க்கு ஒரு போட்டியில் எடுக்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் எடுக்க முடியாது. இந்தப் பிரச்சனையை கொல்கத்தா சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அவர்களுக்கு கடந்த வருடம் டாப் ஆர்டரில் பில் சால்ட் – சுனில் நரைன் அசத்தினார்கள். ஆனால் இந்த வருடம் அது நடைபெற்றவில்லை. ரஹானே தவிர்த்து வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் அசத்தவில்லை” என்று கூறினார்.