எனக்கே சவால் விடுவாரு.. இன்னும் குழப்பமா இருக்கும்.. 100வது போட்டிக்காக அஸ்வினை பாராட்டிய டிராவிட், கும்ப்ளே

Ashwin Dravid Kumble
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தரம்சாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் படைத்தார். அப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் மொத்தம் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதன் வாயிலாக உலகிலேயே தனது 100வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரன் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

ஜாம்பவான்கள் பாராட்டு:
இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு மார்ச் 16ஆம் தேதி தமிழ்நாடு வாரியம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டு பேசியது பின்வருமாறு. “அஸ்வின் இன்னும் கேரியரை முடிக்கவில்லை என்று நம்புகிறேன்”

“அவர் தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் புதுமையின் வாயிலாக சுழல் பந்து வீச்சில் நகர்வை ஏற்படுத்தியுள்ளார். இது ஒரு சிறந்த மரபு. அருமை, சிறப்பாக செயல்பட்டு அவர் இளம் தலைமுறை ஸ்பின்னர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பங்காற்றுவதற்கு ஆர்வத்துடன் இருப்பவர். அவருடன் என்னுடைய நேரத்தை மிகவும் ரசித்தேன்”

- Advertisement -

“அவரைப் பற்றிய நல்ல விஷயம் என்னவெனில் அவர் உங்களுக்கு சவால் விடுகிறார். ஒரு பயிற்சியாளராக நீங்கள் அதை விரும்புகிறீர்கள் அவருடன் இன்னும் இது போன்ற நினைவுகளை எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பேசியது பின்வருமாறு. “என்னுடைய புத்தகத்தில் அஸ்வின் நம்முடைய நாட்டுக்காக விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர்”

இதையும் படிங்க: பாண்டியா போனாலும்.. எங்களிடம் அந்த தமிழக வீரர் ரெடியா இருக்காரு.. குஜராத் கோச் நெஹ்ரா பேட்டி

“அவருடைய புள்ளிவிவரங்கள் சிறப்பாக உள்ளன. அவருக்கும் இந்தியாவின் வெற்றிக்கும் அபரீதமான தொடர்பு உள்ளது. அவர் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. எப்போதும் அதிகமாக அசத்துவதற்கு விரும்புகிறார். அவர் 100வது போட்டியை முன்கூட்டியே விளையாடியிருக்க வேண்டும். இருப்பினும் இந்தியா வெளிநாட்டுக்கு செல்லும் போதெல்லாம் அவர் எப்போதும் தேர்வு செய்யப்படுவதில்லை. அது இப்போதும் எனக்கு குழப்பமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement