போர் அடிக்கும் நேரத்தில் நான் இதனையே செய்வேன் – ரஸ்ஸல் பேட்டி

Russell
- Advertisement -

நேற்று மாலை நடந்த முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி அடித்த 181 ரன்கள் என்ற இலக்கினை கொல்கத்தா அணி கடந்து வெற்றி பெற்றது. கொல்கத்தா வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ரஸ்ஸல். அவரது அதிரடியில் மூலமே நேற்றைய போட்டியில் கொல்கத்தா வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு உத்தப்பா ரஸ்ஸல்-யிடம் பேட்டி ஒன்றினை எடுத்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

அதில் உத்தப்பா நீங்கள் போர் அடிக்கும்போது ரூமில் 300 புஷ்அப்-களை எடுப்பீர்களாமே உண்மையா ? என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த ரசல் ஆமாம் நான் போர் அடித்தால் அப்படியே செய்வேன் அதனாலே எனது உடல் உறுதியாக இருக்கிறது என்று சிரித்தபடி கூறினார் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னரின் அதிரடி ஆட்டத்தினால் 181 ரன்களை குவித்தது. பிறகு ஆடிய கொல்கத்தா அணி 16 ஓவர்கள் வரை தோல்வியின் பிடியில் இருந்தது. பிறகு ரஸ்ஸல் ஆடிய விதம் நம்பமுடியாத அளவில் இருந்தது. மேலும், போட்டியை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தார்.

Advertisement