இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று செஞ்சூரியனில் துவங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சிறிது இடைவெளிக்கு பிறகு அணியில் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த போட்டி அவருக்கு 150 ஆவது டெஸ்ட் போட்டியாகும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் ஆஷஸ் தொடரின் போது காயத்தால் வெளியேறினார்.
அதன் பிறகு தற்போது மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ள ஆண்டர்சன் இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் 150 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
🦁 An incredible achievement! Congratulations on 1️⃣5️⃣0️⃣ Test caps @jimmy9! 👏
Follow Live: https://t.co/WVJCAgDDJo pic.twitter.com/f0gHPsZR8G
— England Cricket (@englandcricket) December 26, 2019
சுமார் 142 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 150 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். மேலும் 150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற 9 தாவது வீரராகவும் ஆண்டர்சன் பெயர் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக சச்சின், பாண்டிங், ஸ்டீவ் வாக், காலிஸ், சந்திர பால், டிராவிட், குக் மற்றும் பார்டர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டி இருக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருமே பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.