மிடில் ஆர்டரில் இறங்கி நான் சிறப்பாக விளையாட இதுவே காரணம் – ஆட்டநாயகன் ராயுடு பேட்டி

rayudu 2
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

csk-vs-mi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

இந்த போட்டியின் துவக்கத்தில் அடுத்தடுத்து வாட்சன் மற்றும் விஜய் என 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னாவின் இடத்தில் இறங்கிய டூப்லெஸிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதிலும் சிறப்பாக விளையாடிய ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஆட்டநாயகன் விருது பெற்ற ராயுடு சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Rayudu 3

லாக்டவுன் நேரத்திலும் நான் தொடர்ந்து எனது பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். இந்த போட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு துவங்குவதால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட காத்திருந்தேன். மேலும் பனிப்பொழிவின் காரணமாக பேட்டிங் செய்யும் போது எனக்கு அது இன்னும் எளிதாக அமைந்தது. முதலில் சென்னையில் நாங்கள் செய்த பயிற்சியும் தற்போது துபாய் வந்து இங்கு செய்து பயிற்சியும் இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாட உதவியது என்று ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement