ஐபிஎல்-லில் அதிரடியாக விளையாடியதற்கு காரணம் இதுதான்..! – அம்பதி ராயுடு விளக்கம்..!

rayudu
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமையுடன் (மே 27) முடிவடைந்தது. அன்று நடந்த போட்டியில் ஹைத்ராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கை பற்றிய சென்னை அணிக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை அணி தான் சிறந்த அணி என்று அம்பத்தி ராயடு புகழாராம் சூடியுள்ளார்.
IPL 2018 - SRH vs CSK

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த தொடரில் 8 அணிகள் பங்குபெற்று 60 போட்டிகளில் விளையாடியாது. கடந்த ஞாயிற்றுகிழமை(மே 27 ) இந்த தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

சென்னை அணியின் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் வீரர் அம்பத்தி ராயுடு தமது ட்விட்டர் பக்கத்தில் “என்ன ஒரு அரபுத்தமான கம் பேக். சென்னை அணிதான் சிறந்த அணி ” என்று பதிவிட்டுள்ளார்.
Ambathi Rayudu
இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ராயுடு, இந்த ஐ.பி.எல் தொடரின் 46 வது லீக் ஆட்டம் புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் சர்வேதேச மைதானத்தில் மே 13 ஆம் தேதி நடைபெற்ற போது 62 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement