என்மீது இந்த பழியை சுமத்தி எங்கள் அணி வீரர்களே என்னை அடிக்க வந்தனர் – மனம்திறந்த அக்தர்

Akhtar
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு நேரத்தில் பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று Helo நேரலையில் பங்குபெற்ற ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தர் பகிர்ந்துகொண்ட முக்கிய தகவல்கள் :

Akhtar 1

- Advertisement -

1) ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக விளையாடுவது எனக்கு கடினமாக இருக்கும். டெல்லி,காபா,கேப்டவுன் எனக்கு மிகவும் பிடித்த மைதானங்கள். கொல்கத்தாவில் விளையாடும் போது நான் மிகவும் ரசித்து விளையாடுவேன்.

2) என்னை பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த கேப்டன் கங்குலி தான். தோனியும் சிறந்த கேப்டன் தான். எங்களை இந்தியா வீழ்த்தும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. குறிப்பாக 1999ல் நாங்கள் நிறைய போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறோம். ஆனால், 2001ல் கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணி மாறுபட்ட அணியாக தோன்றியது. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கங்குலி மிகவும் புத்திசாலி.

3) எனக்கு 6 வயது இருக்கும்போது நான் நடக்கவே மிகவும் சிரமபட்டேன்.

- Advertisement -

4) 2005ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கேப்டனால் என் மீது பாலியல் குற்றச்சாட்டு சூட்டப்பட்டது. இதனால், என் உடல்தகுதி சரியில்லை எனக்கூறி அடுத்த போட்டியில் விளையாட என்னை அனுமதிக்கவில்லை. மேலும்,அணியினர் அனைவரும் என்ன தாக்க முயற்சித்தனர். இதற்கு முன் இதனை நான் ஊடகத்தில் தெரிவித்ததில்லை இப்பொழுதுதான் இதனை முதல்முறையாக தெரிவிக்கிறேன்.

5) 1998 மற்றும் 1999 எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அந்த காலக்கட்டத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினேன்.

Akhtar

6) நான் சல்மான்கானை சந்தித்து பல விசயங்கள் பேசினேன். நானும்,அவரும் பீனிக்ஸ் பறவையை போன்றவர்கள்.

7) பாபர் மற்றும் ஹைதர் அலி இருவருமே சிறந்த வீரர்கள். இருவரையும் ஒப்பிடுவது தவறு.

Advertisement