பாக் கிரிக்கெட் நிர்வாகம் செய்ததும் தவறு. அந்த முடிவை மீறி நடந்துகொண்ட இவர்மீதும் தவறு – அக்தர் காட்டம்

Akhtar
- Advertisement -

கொரனோ அச்சுறுத்தலுக்கு இடையே மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் துவங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 8 ஆம் தேதி துவங்குகிறது.

Pak-1

- Advertisement -

அந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் விளையாடுகிறது. பாகிஸ்தான் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 29 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் அவரவர் வீடுகளுக்கு சென்று இந்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பகார் ஜமான் ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Hafeez 1

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மீறி தனியார் மருத்துவமனையில் முஹமது ஹபீஸ் தனது குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை மீண்டும் செய்து கொரோனா தொற்று இல்லை என்பதை கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசிய அக்தர் கூறுகையில் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் செய்தது தவறு. அனைத்து வீரர்களுக்கும் சோதனை செய்து இருக்கக்கூடாது. லாகூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்களில் இருந்த வீரர்களை மட்டுமே சோதனை செய்து இருக்க வேண்டும் என்றும் அக்தர் கூறினார்.

Hafeez

மேலும் மீண்டும் மீண்டும் பரிசோதனையில் இன்னும் பாசிட்டிவ் கண்டறியப்படும் என்று அக்தர் கூறினார். மேலும் ஹபீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த விடயங்களை பகிர்ந்தது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement