சேவாக் கூறியது போல விராட் கோலி நிச்சயம் அந்த சாதனையை செய்வார் – அக்தர் நம்பிக்கை

Akhtar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்து 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். இதுவரை 70 சதங்களை விளாசியுள்ள அவர் தனது 70ஆவது சதத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி இதுவரை சதம் இன்றி தவித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

Kohli

- Advertisement -

அதேபோன்று அவரது பேட்டிங்கும் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரின் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணி தொடர்ச்சியாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பினை வழங்கி வருகிறது. தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய அவர் ஒரு பேட்ஸ்மேனாக நிச்சயம் இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் அவருக்கு ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் விராட் கோலிக்கு ஆதரவாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன் காரணமாகவே அவரை பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.

Kohli

பொதுவாகவே ஒரு வீரரின் இறுதி கட்டத்தில் அவர் விளையாடும் போட்டிகள் அனைத்தும் முக்கியமான போட்டிகளாக பார்க்கப்படும். அதோடு கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் போது ஒவ்வொரு போட்டியையும் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் கோலிக்கு என்ன நடக்கப்போகிறது என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.

- Advertisement -

ஆனால் நிச்சயம் என்னை பொருத்தவரை கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 110 சதங்களை அடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரது இலக்குகளை பெரியதாக வைத்திருந்தால் நிச்சயம் அவர் மீண்டும் தனது பார்முக்கு திரும்பி இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் அதுவே எனது விருப்பம் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சச்சினை முந்தி வரலாறு படைத்த ரூட் – நியூஸிலாந்தை சாய்த்து வெற்றி பயணத்தை துவங்கிய இங்கிலாந்து

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கும் நிச்சயம் விராட் கோலி 100 சதம் மட்டுமல்ல அதையும் தாண்டி 110 சதங்களை விளாசுவார் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அதற்கு ஆதரவாக அக்தரும் அதே கருத்தினை கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement