மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது. நாளை மறுதினம் இந்த தொடரின் டி20 போட்டிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் குறித்து பல சர்ச்சைகள் வந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அக்தர் இந்திய அணியின் கேப்டன் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு சரியான வீரர் விராட் கோலிதான். ஏனெனில் விராத் கோலி தொடர்ந்து இந்திய அணி சரியான பாதைக்கு அழைத்துச் சென்றாலும் எதிர்பாராதவிதமாக தோல்விகள் ஏற்படுகிறது. அதே வகையில் ரோகித் சர்மா சவாலான பொறுப்புகளை சுமக்க சரியான ஆள் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் 5 சதம் அடித்து தனது பேட்டிங் திறமையை அவர் நிரூபித்தார்.
எனவே தற்போதைய இந்திய அணிக்கு எந்த மாற்றமும் தேவையில்லை. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் போதும் இந்திய அணி நிச்சயம் சாதிக்கும். ஒரு அணி எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் சிறிது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே போட்டியில் வெல்ல முடியும். உலக கோப்பை இறுதி போட்டியில் நடந்த நிகழ்வு கூட அதற்கு உதாரணமாகக் கூறலாம். ஏனெனில் இரு அணிகளும் சமமாக மோதிய நிலையில் அதிர்ஷ்டம் காரணமாக இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது என்று அக்தர் கூறினார்.