இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கிரிக்கெட் குறித்த தனது கருத்துக்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவது இயல்பான ஒரு விடயம். இந்நிலையில் அடுத்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றும் அணி இதுதான் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை விட்டுள்ளார்.
அதில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அடுத்த ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்றும் ஸ்டோக்ஸ், ஸ்மித், ரஹானே, ஆர்ச்சர் மற்றும் கவுதம் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் அந்த அணியை சாம்பியன் அணி என்பதுபோல தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அவருடைய கருத்தின் முழு தகவல் யாதெனில் ஸ்மித் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். ஸ்டோக்ஸ் தனி ஆளாக நின்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து வென்று கொடுத்தார். ரஹானே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
Stokes, Smith, Rahane, Jofra, Gowtham….Rajasthan Royals for the trophy next #IPL? ☺️
— Aakash Chopra (@cricketaakash) August 25, 2019
ஆர்ச்சர் தனது அபாரமான பந்துவீச்சில் ஆஸ்திரேலிய திணறடித்து வருகிறார். அது மட்டுமின்றி இந்திய அணியின் இளம் வீரர் கௌதம் தற்போது இந்தியாவில் நடைபெற்ற தொடரில் அதிரடியாக ஆடி சதம் அடித்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டுத்தான் ராஜஸ்தான் அணி அடுத்த ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.