இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கே இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 308 ரன்களை குவித்த வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 305 ரன்கள் குவித்து மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்படி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது.
அதனைத்தொடர்ந்து இந்திய அணியானது இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக அஜித் அகார்கர் அவர்கள் வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி முதல் போட்டியில் 54 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
ஆனாலும் அவரது இடம் தற்போது டேஞ்சரான இடத்தில் இருப்பதாக அஜித் அகார்க்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போது இந்திய அணியில் அவ்வப்போது மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருப்பதினால் எந்த வீரர்களின் இடமும் உறுதியானதாக இருப்பதாக தெரியவில்லை.
ஏனெனில் ஒரு வீரரின் இடத்திற்கு மற்றொரு வீரர் போட்டி போடும்போது அந்த இடத்திற்கு உண்டான சரியான ஆட்டத்தை வீரர்கள் அளித்தே ஆக வேண்டும். அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக வெளிநாட்டு தொடர்களிலும் விளையாடி வருகிறார்.
ஆனால் அதே வேளையில் ஸ்ரேயாஸ் ஐயர் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பெற்று விளையாடி வந்தாலும் ஷார்ட் பாலில் அவர் பெரிய அளவில் சிக்கலை சந்தித்து வருகிறார். தொடர்ச்சியாக அவர் ஷார்ட் பாலில் ஆட்டம் இழந்து வருவது தற்போது அவரது இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இயற்கையாகவே புல் ஷாட் விளையாட வரவில்லை. ஆனாலும் அவர் அந்த குறைகளை சரி செய்து கொள்ள வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
இதையும் படிங்க : புதிய தெ.ஆ சென்னை டி20 அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இவ்வளவு தொடர்புகளா – சுவாஸ்ரசியமான பதிவு
ஒருவேளை இனியும் அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பாலில் ஆட்டம் இழந்து வந்தால் நிச்சயம் அவரது இடம் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் இந்த பிரச்சனையை சமாளித்து அதிலிருந்து மீண்டு வெளிவரும் அளவிற்கு ஷ்ரேயாஸ் ஐயரிடம் திறமை உள்ளதாகவும் அஜித் அகார்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.