ஆதங்கத்தை வெளிப்படுத்திய வார்னர்.! ஆச்சர்யத்தில் ஆஸ்திரேலிய மக்கள்..!

warnerfier
- Advertisement -

சில மாதங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கய டேவிட் வார்னர், கடந்த வியாழக்கிழமை நடந்த டி 20 போட்டியில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் பார்மில் வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

warner

- Advertisement -

கடந்த மார்ச் மாதம் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு 12 மாத தடை விதித்திருந்தது. இருப்பினும் அவர் உல் நாட்டு போட்டிகளில் விளையாடலாம் என்று சலுகை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(ஜூன் 14) பரிஸ்பனில் உள்ள ஆலன் பார்டர் ஓவல் மைதானத்தில் டி 20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு எதிராக டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 130 ரன்களை குவித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை பெற்ற பிறகு டேவிட் வார்னர் விளையாடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

warner

இத்தனை மாதங்கள் கிரிக்கெட் போட்டியில் தடையில் இருக்கும் டேவிட் வார்னர், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று ஆஸ்திரேலிய நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் , இந்த போட்டிக்கு பிறகு ரசிகர் ஒருவர் கூறுகையில்’அவர் 18 சிக்சர்களை அடித்தார் என்று நினைக்கிறேன். அதில் அரை டஜன் சிக்சர்கள் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்றது.’ என்று கூறியிருக்கிறார்.

Advertisement