டாஸ் மட்டும் ஜெயிக்காதீங்க. கேப்டன் ரோஹித்துக்கு ரசிகர்கள் வேண்டுகோள் – அடிலெயிடு மைதானத்தின் சுவாரசிய கதை

INDvsENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் இடம்பிடித்திருந்த இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய வேளையில் நேற்று சிட்னி நகரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியானது முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Semi Finals

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியானது இன்று பகல் 1:30 மணிக்கு அடிலெயிடு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 13-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்நிலையில் இந்த இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறும் அடிலெயிடு மைதானத்தில் டாஸ் வெற்றி பெறும் அணி பலமுறை தோல்வியை சந்தித்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் பொதுவாகவே டி20 கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை இரவு நேரத்தில் போட்டி நடப்பதால் பனித்துளிகள் அதிகமாக இருக்கும் என்பதன் காரணமாக இரண்டாவது பந்துவீசும் அணி கஷ்டப்படும். எனவே டாஸ் வென்றாலே கேப்டன்கள் கண்ணை மூடிக்கொண்டு முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்வார்கள். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலக கோப்பையில் கூட பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றன.

Rohith

ஆனால் தற்போது போட்டி நடைபெற இருக்கும் அடிலெயிடு மைதானமும் சரி, ஆஸ்திரேலியா முழுவதுமே சரி இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகளின் அடிப்படையில் 11 முறை டாஸ் வென்ற அணிகள் தோல்வியையே சந்தித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அடிலெயிடு மைதானம் முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை கொடுத்துள்ளது.

- Advertisement -

அதன்படி நெதர்லாந்து அணிக்கு எதிராக அடிலெயிடு மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று தோல்வியை தழுவியது. அதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி அடிலெயிடு மைதானத்தில் டாஸ் வென்று தோல்வியை சந்தித்திருக்கிறது. எனவே இன்று நடைபெற இருக்கும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸை மட்டும் ஜெயிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் இந்த புள்ளி விவரத்துடன் ரோகித்திடம் வேண்டுகோள் ஒன்றினை சமூக வலைத்தளம் மூலம் முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 வீரர்கள் ஏலம் எப்போது? வெளியான தேதி, இடம் – புதிய ரூல்ஸ் இதோ

எது எப்படி இருப்பினும் போட்டியின் இறுதியில் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றி பெறும் என்பதனால் இந்திய அணிக்கு தற்போது ரசிகர்கள் தங்களது முழு ஆதரவினையும் தொடர்ச்சியாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement