IND vs AUS : உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்படவுள்ள ஆடம் ஜாம்பா. தடை செய்யவுள்ள ஐ.சி.சி – விவரம் இதோ

நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய

Zampa
- Advertisement -

நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இந்த தொடரில் இது இரண்டாவது வெற்றியாகும்.

zampa 1

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா செய்த செயல் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவர் மீது பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி-யிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 6 ஓவர்கள் வீசிய ஜாம்பா 50 ரன்களை விட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

துவக்கத்தில் இருந்தே இவரது ஓவரை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக அடித்து விளையாடியதால் அவர் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு பந்தினை வீசும் முன் தனது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு சான்ட் பேப்பர் போன்று ஏதோ ஒன்றை கையிலெடுத்து அடிக்கடி பந்தை தேய்ப்பதை மைதான கேமராமேன்கள் படம்பிடித்துள்ளனர். அதன் அதன்படி ஒவ்வொரு வந்திணையும் வீசுவதற்கு முன் தனது பேண்ட் பாக்கெட்டில் கைவிடும் ஜாம்பா மீண்டும் அதனை எடுத்து பந்தின் மீது தேய்க்கிறார் அவரின் இந்த செயல் கேமராக்களில் தெளிவாக பதிவாகி உள்ளது.

zampa 2

அவர் மீதான இந்த புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கும் ஆஸ்திரேலிய அணி மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதிக்கும் என்று தெரிகிறது. மேலும் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடமுடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே சென்ற வருடம் தான் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றனர். அதனப்பிறகு தற்போது ஆஸ்திரேலிய அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement