இதுக்கு குடோன்லயே இருக்கலாம்.. காயத்தால் விலகிய ருதுராஜுக்கு மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

- Advertisement -

தென்னாபிரிக்காவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்து அடுத்ததாக நடந்த ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட வலுவான இந்திய அணி களமிறங்குகிறது.

அதனால் இம்முறையாவது தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதிக்குமா எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த நிலையில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியிலிருந்து துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

மாற்று வீரர்:
குறிப்பாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் காயத்தை சந்தித்த அவர் 3வது போட்டியில் விளையாடவில்லை. அந்த நிலையில் அவரது வலது கையின் மோதிர விரலில் சந்தித்த காயத்தை சோதித்ததில் குணமடைவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்று முடிவுகள் வெளியானதாக தெரிகிறது. அதனால் இத்தொடரிலிருந்து ருத்ராஜ் விலகுவதாக தெரிவித்துள்ள பிசிசிஐ அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பேசாமல் பருத்திமூட்டை குடோனிலேயே இருக்கலாம் என்பதே ரசிகர்களின் ரியாக்சனாக இருக்கிறது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் கடந்த 2 வருடங்களாக இதே போல பல தொடர்களில் இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் யாராவது காயமடைந்து வெளியேறினால் அந்த இடத்தை பெயருக்காக நிரப்பக்கூடிய ஒரு வீரராகவே அபிமன்யூ ஈஸ்வரன் கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இருந்து வருகிறார். அந்த வரிசையில் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களா களமிறங்குவார் என்பதால் இத்தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இருப்பினும் தென்னாபிரிக்கா ஏ அணிக்கு டிசம்பர் 26ஆம் தேதி துவங்கும் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டிக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக அவர் செயல்பட உள்ளார்.

இதையும் படிங்க: தெ.ஆ இல்ல.. அந்த டெஸ்ட் சீரிஸ் தான் உங்களுக்கு பெரிய சவாலா இருக்கும்.. இந்திய வீரரை எச்சரித்த கம்பீர்

எனவே ஒருவேளை ருதுராஜுக்கு பதிலாக முதன்மை அணியில் தேவைப்பட்டால் உடனடியாக சேர்ந்து கொள்ளும் வகையில் அபிமன்யூ ஈஸ்வரன் பெயரை மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அந்த இந்தியா ஏ அணியில் ரிங்கு சிங் ஆவேஷ் கான், சர்பராஸ் கான், ரஜப் படிதார் ஆகியோர் சேர்க்கப்படுவதாகவும் குல்தீப் யாதவ் விடுவிக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement