INDIA : இந்திய அணியின் இவரை என்னிடம் அனுப்புங்கள் உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக மாற்றுகிறேன் – ரசாக்

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு

Razzaq
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பாண்டியா தற்போது உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக உருவெடுத்து வருகிறார். அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் தற்போது சிறப்பாக உள்ளது.

அவரை என்னிடம் அனுப்பினால் நான் அவரை சிறப்பாக பயிற்சி கொடுத்து அவரை உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக மாற்றிக்காட்டுவேன். அப்படி அதற்கு பிசிசிஐ ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவர் மிகப்பெரிய ஆல்-ரவுண்டராக மாற என்னால் முடிந்த அனைத்து ஆலோசனைகளையும் அவருக்கு நான் வழங்க தயாராக இருக்கிறேன் என்று அப்துல் ரசாக் கூறினார்.

Pandya 1

அப்துல் ரசாக் பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த முன்னாள் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளில் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அந்த அணிக்கு வெற்றியை தேடித் தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement