தொடரில் இருந்து வெளியேறியதும் ரசிகர்களுக்காக உருக்கமான வேண்டுகோளை முன்வைத்த ஏ.பி.டி – விவரம் இதோ

ABD
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு பெங்களூரு அணி வீரர்கள் ரசிகர்களுக்காக ஒரு வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளனர். அந்தப் பதிப்பில் ஏபி டிவிலியர்ஸ் தனது ரசிகர்களுக்கு கூறியதாவது : பெங்களூரு ரசிகர்கள் அனைவரும் இந்த வருடமும் எங்களுக்கு கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. ஆடுகளத்தில் உங்களது ஆதரவை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

abd 1

மைதானத்துக்கு வந்து நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். அடுத்த வருடம் நிச்சயம் நீங்கள் மைதானத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்றும் எங்களது அணியின் பின்னால் ஒரு பெரிய பலமாக நீங்கள் இருப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன் என தனது ரசிகர்களுக்காக உருக்கமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement