மற்ற வீரர்கள் கூட சொதப்பலாம்.. ஆனா சஞ்சு சாம்சன் இந்த விடயத்துல சொதப்ப மாட்டாரு – ஏ.பி.டிவில்லியர்ஸ் நம்பிக்கை

ABD-and-Samson
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தனித்தனியே அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 10-ஆம் தேதி துவங்கும் இந்த தென்னாப்பிரிக்க தொடரானது ஜனவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்காக ஒருநாள் அணியில் மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சனை மீண்டும் இந்திய அணியில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நிச்சயம் தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஏனெனில் மற்ற பேட்ஸ்மேன்கள் விட அவர் பேட்டிங் செய்யும்போது நேராக நிமிர்ந்து நின்று விளையாடக் கூடியவர்.

- Advertisement -

அதன் காரணமாக தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளை அவர் மிகவும் ரசிப்பார். அதோடு அதிக பவுன்சர் மற்றும் ஸ்விங் இருக்கும் இந்த ஆடுகளங்களில் மற்ற இந்திய வீரர்கள் கூட தடுமாற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சஞ்சு சாம்சன் இது போன்ற மைதானங்களில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

இதையும் படிங்க : இவரையா தெ.ஆ தொடரில் ட்ராப் பண்ணீங்க.. செயலால் பதிலடி கொடுத்த இந்திய வீரர்.. தேர்வுக் குழுவை விளாசும் ரசிகர்கள்

அதோடு அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்படும் விடயமாக பார்க்கப்பட்ட வேளையில் தற்போது சஞ்சு சாம்சனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement