உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் கழட்டிவிடப்பட இதுவே காரணம் – ஏ.பி.டி கருத்து

ABD-and-Yuzi
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோரது தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் அணித்தேர்வு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று அணியில் இடம் பெறாத ஒரு சில வீரர்கள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியிலும் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிக அளவு பேசப்படும் விடயமாக யுஸ்வேந்திர சாஹலின் பெயர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரருமான ஏ.பி டிவில்லியர்ஸ் யுஸ்வேந்திர சாஹலின் நீக்கம் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

யுஸ்வேந்திர சாஹல் ஒரு தரமான மேட்ச் வின்னர் என்பதை பலமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார். ஆனாலும் தற்போது அவரை இந்திய அணியில் இருந்து நீக்க காரணம் யாதெனில் : தற்போது இந்தியாவில் ஏகப்பட்ட ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அதோடு தற்போதைய இந்திய அணியில் உள்ள டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து விட்டால் பின் வரிசையில் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் இருக்க வேண்டும் என்று இந்திய அணி நினைக்கிறது. அதன் காரணமாக சாஹல் நீக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளராக இருப்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர்கள்.

இதையும் படிங்க : தோனியை கடவுள் மாதிரி அங்க பாக்குறாங்க. நானே நேர்ல பாக்கும்போது தான் அது தெரிஞ்சது – கேமரூன் க்ரீன் நெகிழ்ச்சி

அவர்களை போன்ற வீரர்களையே இந்திய அணி எதிர்பார்க்கிறது. ஒருவேளை இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் ஆறு முதல் ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் பின்வரிசையில் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் இருந்தால் அது அணிக்கு கை கொடுக்கும் என்று கருதுகிறார்கள். அதன் காரணமாகவே சாஹல் நீக்கப்பட்டு இருக்கலாம் என ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement