இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அதேவேளையில் இந்த தொடர் முழுவதும் அஷ்வின் சேர்க்கப்படாதது குறித்து ஒரு பெரிய விவாதமே எழுந்துள்ளது. மேலும் 4வது டெஸ்ட் போட்டியின்போது அஷ்வின் அணியில் இடம் பெற்றிருந்தால் மேலும் சாதகமாக இருந்திருக்கும் என்று சிலர் தொடர்ச்சியாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்தியா ஓவல் டெஸ்டில் பெற்ற இந்த வெற்றி குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ள டிவிலியர்ஸ் குறிப்பிடுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகராக நீங்கள் இந்த போட்டியை பாருங்கள். அணித் தேர்வு மற்றும் மற்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவதை விடுங்கள்.
As “spectators” of Test Cricket, just stop worrying about team selection and other nonsense and start appreciating the competition, passion, skill and patriotism unfolding in front of your eyes. You’re missing a good game!
— AB de Villiers (@ABdeVilliers17) September 6, 2021
அப்படி செய்வதன் மூலம் நீங்கள் நல்ல ஒரு கிரிக்கெட்டை தவற விடுகிறீர்கள். இந்தியா இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடியது. விராட் கோலி அணியை மிகவும் பிரமாதமாக வழிநடத்தினார். இறுதிப் போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Well played India, well Captained @imVkohli and amazing skill and guts from a few individuals. Also well played @root66 & England! Great ad for our beautiful game! Excited for the finale
— AB de Villiers (@ABdeVilliers17) September 6, 2021
அவரின் இந்த கருத்து இந்தியா இங்கிலாந்து தொடரை அவர் எவ்வளவு உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒரு ரசிகராக பார்த்தால் நிச்சயம் அது அற்புதமான ஒன்று என்பதையும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.