RCB vs KXIP : ஒற்றை கையால் மைதானத்தின் வெளியே சிக்ஸ் அடித்து அசத்திய – ஏ.பி.டி வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

ABD
- Advertisement -

நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி அதிக ரன்களை குவிக்க ஏ.பி.டிவில்லியர்ஸ் முக்கிய காரணமாக திகழ்ந்தார். 44 பந்துகளை சந்தித்த ஏ.பி.டி 82 ரன்களை அடித்தார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் குறிப்பாக ஷமி வீசிய ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை அடித்தார். சிக்ஸரை ஒற்றை கையால் மைதானத்தை விட்டு வெளியில் அடித்தார் ஏபிடி இதனை கண்ட ரசிகர்கள் வியந்தனர். இந்த சிக்ஸரை ஏபிடி ஆச்சரியமாக பார்த்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.

இதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement