IND vs AUS : அவர் போட்ட அந்த 2 ஓவர்தான் நாங்க தோக்க காரணம் – தோல்விக்கு பிறகு ஆரோன் பின்ச் பேட்டி

Finch
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

Dinesh Karthik

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற வாய்ப்புடன் ஆஸ்திரேலிய அணியும், இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணியும் நேற்று விளையாடியதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. நேற்று போட்டிக்கு முன்பாக நாக்பூரில் பெய்த பலத்த மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது.

அதனால் போட்டியானது 8 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெறும் என்று அம்பயர்கள் அறிவித்ததால் இந்த போட்டியின் மீதான சுவாரசியம் மேலும் கூடியது. பின்னர் நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தது.

Axar Patel

இதன் காரணமாக 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் பேசியது என்ன?

எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்று ஆரோன் பின்ச் கூறினார். அவர் கூறியது போன்றே நேற்று அக்சர் பட்டேல் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement