சி.எஸ்.கே அணியில் இவங்க 2 பேர் ரன் அடிக்கனும். இல்லனா மாட்டிக்குவாங்க – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

Chopra
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை அணி இம்முறை வலுவாக மீண்டு வந்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இருந்து சென்னை அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அணியில் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதால் தற்போது வரை சென்னை அணி எந்த பிரச்சனையுமின்றி விளையாடி வருகிறது.

csk

- Advertisement -

சி.எஸ்.கே அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மேலும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அளவிற்கு கூட சென்னை அணி தற்போது முழு பலத்துடன் உள்ளது என்று கூறலாம். இந்நிலையில் சென்னை அணியில் விளையாடும் 2 வீரர்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் விரைவில் தங்களது பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியை பொறுத்தவரை 2 பேர் பேட்டிங் பார்மிற்கு திரும்புவது அவசியம். அதன்படி சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் பெரிய அளவு ரன்களை குவிக்க வில்லை. இனி வரும் போட்டிகளில் அவர் சற்று பேட்டிங்கில் முன்கூட்டியே இறங்கி ரன்கள் அடிக்க வேண்டியது அவசியம் இல்லை என்றால் அவரது பார்ம் முடங்கிவிடும்.

raina 1

இதன் காரணமாக நிச்சயம் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்படலாம். அதேபோன்று தோனியும் தனது பேட்டிங்கில் பங்களிப்பினை வழங்க வேண்டும். ஏனெனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை அணி குறைவான ரன்களையே சேசிங் செய்ததால் தோனியின் பேட்டிங் பெரிய அளவில் பேசப்படவில்லை.

dhoni 3

இருப்பினும் சென்னை அணிக்கு ஒரு பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படும் போது தோனியின் ஆட்டம் மிக முக்கியமான ஒன்று. எனவே அவரும் தனது பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கில் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம் எனவும், இல்லை என்றால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement