தெ.ஆ ஒருநாள் தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும் – ஆகாஷ் சோப்ரா சப்போர்ட்

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் 26-ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 19ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தென்னாபிரிக்கா சென்று அடைந்த வேளையில் இதுவரை இந்த தொடருக்கான ஒருநாள் அணி அறிவிக்கப்படவில்லை.

Dekock

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பில் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சில மாதங்களாகவே வெங்கடேச ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நம்மை சுற்றி அவரது பெயர் கேட்டுக்கொண்டே இருக்க காரணம் கடைசியாக 12 மாதங்களில் அவரது ட்ரீம் ஃபார்மில் இருக்கிறார். கண்ணை திறந்து கொண்டு தற்போது அவர் கனவு கண்டு வருகிறார்.

Venkatesh-iyer

ஐபிஎல் தொடரிலும் சரி, இந்திய அணிக்காக அறிமுகமான போதும் சரி, விஜய் ஹசாரே கோப்பையிலும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நிச்சயம் அவரிடமுள்ள திறமைக்கு இந்தியஅணியின் ஆல்-ரவுண்டராக ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : படுமோசமான விபத்தில் சிக்கிய சச்சினின் நெருங்கிய தோழி. காப்பாற்றிய காவலருக்காக – சச்சின் செய்த செயல்

ஹார்டிக் பாண்டியா தெ.ஆ ஒருநாள் தொடருக்கு தகுதி பெறாத பட்சத்தில் இந்திய அணிக்காக வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்யலாம் என ஆகாஷ் சோப்ரா அவருக்கு ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது

Advertisement