IPL 2022 : பெங்களூரு அணி மீண்டும் அவரை கண்டிப்பா ஏலத்தில் எடுக்கும் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இந்தியாவில் நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் சீசனானது இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ள நிலையில் தற்போது அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் எடுக்கப்போகும் வீரர்கள் குறித்த விவாதங்களை துவங்கியுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி விராட் கோலி, சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளது.

RCB

- Advertisement -

தற்போது வரை 57 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ள பெங்களூரு அணி முக்கிய வீரர்கள் பலரை டார்கெட் செய்துள்ளது. குறிப்பாக பெங்களூரு அணியின் கேப்டனாக வரப்போகும் வீரர் குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகம் உள்ளது.

இந்நிலையில் பெங்களூரு அணியால் நிச்சயம் ஏலம் எடுக்கப்பட இருக்கும் வீரர் குறித்து தற்போது இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் பெங்களூரில் அணியானது அவர்கள் அணியில் தக்க வைக்காத ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாஹல் ஆகியோரை கட்டாயம் ஏலத்தில் எடுக்கும் என்று நினைக்கிறேன்.

Chahal

ஏனெனில் தற்போது அணியில் அவர்கள் தக்க வைக்கப்படவில்லை என்றாலும் சற்று குறைவான தொகைக்கு அவர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்க பெங்களூரு அணி முனைப்பு காட்டும். ஏனெனில் பெங்களூர் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாகவே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சாஹல் நிச்சயம் ஆறு முதல் ஏழு கோடி வரை ஏலத்தில் எடுக்கப்படுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : ஆர்.சி.பி அணி கேப்டனாக வாங்க இருக்கும் வீரர் இவர்தானாம் – யார் தெரியுமா?

அதே போன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் சுமார் 8 கோடி வரை சென்றாலும் அவரையும் ஏலத்தில் எடுக்க பெங்களூரு அணி ஆர்வம் காட்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement