இந்திய அணியே எதிரில் நின்றாலும் இந்த ஐ.பி.எல் அணி அவங்கள ஈஸியா ஜெயிச்சிடுவாங்க – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

Chopra
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஒரு பிரம்மாண்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியை உருவெடுத்துவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மற்ற அணிகளைப் போல் தான் ஒரு சாதாரண அணியாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு வருடமாக இந்த அணியின் செயல்பாடு உச்சக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. எதிர்வரும் அணிகள் ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

mi

- Advertisement -

சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கத்தில் கூட எந்த அணியாலும் வர முடியாது அந்த அளவிற்கு தான் இந்த அணியின் வீரர்கள் விளையாடி வருகின்றனர். பதிமூன்றாவது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் கோப்பையை வென்றது. இந்த கோப்பை அந்த அணிக்கு ஐந்தாவது கோப்பை ஆகும்.

இதற்கு முன்னர் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணியும் கடுமையாக போராடி லீக் சுற்று, பிளே ஆப் சுற்று என தட்டுத்தடுமாறி இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வென்றது. ஆனால் இந்த வருடம் நேரடியாக மிக எளிதாக ஈடு கொடுகக் கூட எதிரணியே இல்லாதவகையில் கோப்பையை வென்று இருக்கிறது.

Ishan kishan

இந்நிலையில் மும்பை அணியை ஏகபோகமாக பாராட்டிப் பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அவர் கூறுகையில் …

- Advertisement -

எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தான் உலகில் மிகச்சிறந்த டி20 அணி . தற்போது இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்ற வீரர்களை வைத்து இந்திய அணியையும் கட்டமைத்து டி20 போட்டியில் விளையாடினால் நிச்சயமாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

srh

எந்த ஒரு அணியையும் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தும் வல்லமை படைத்திருக்கிறது பேட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவிற்கு வளர்ந்து நிற்கிறது என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Advertisement