சி.எஸ்.கே ? மும்பை இந்தியன்ஸ் ? யார் வெற்றி பெறுவார்கள் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கோலாகலமாக துவங்க உள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய நேரப்படி சுமார் ஏழு முப்பது மணிக்கு ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் துபாய் மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் மிகப்பெரிய இரண்டு அணிகளாக திகழும் ஜாம்பவான் அணிகள் இன்று மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CskvsMi

- Advertisement -

அதுமட்டுமின்றி நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய தொடர் ரசிகர்களை வசீகரித்த வந்துள்ளதால் இந்தத் தொடரின் மீதான ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த முதல் போட்டியில் வெற்றி பெறும் அணி ? குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் சிஎஸ்கே அணியை வீழ்த்தி இந்த முதல் போட்டியில் வெற்றி பெறும். ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது பலமாக இருப்பது மட்டுமின்றி இரண்டாம் பாதியில் ஆதிக்கத்தை செலுத்த நினைப்பவர்கள்.

இதன் காரணமாக முதல் போட்டியிலேயே தங்களது வெற்றியை அவர்கள் நிச்சயம் பதிவு செய்ய நினைப்பார்கள். இருப்பினும் இந்த போட்டியில் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள். அந்த வகையில் மொயின் அலி மற்றும் ஜடேஜா ஆகியோர் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

துபாய் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் பவர் பிளே ஓவர்களுக்குள் நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்கள் விழும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement