IND vs RSA : 3 ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Aakash Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியானது இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நடைபெற உள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

INDvsRSA

- Advertisement -

ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகளை குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்து பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இருப்பினும் இந்த மூன்றாவது போட்டியில் இருந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு மீண்டு வரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களையும் பல்வேறு முன்னாள் வீரர்களும் வெளியிட்டு வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த போட்டியில் நிச்சயம் தென்ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

miller

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நான் பலவீனமான இந்த இந்திய அணியால் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த முடியாது என்று கூறியதன்படியே நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

அதற்கு காரணம் தென்னாப்பிரிக்கா அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தற்போது சிறப்பான பார்மில் உள்ளனர். அதுமட்டுமின்றி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ள சவுத் ஆப்பிரிக்கா அணியில் அனுபவமும் கலந்து இருப்பதால் அந்த அணி எளிதில் இந்திய அணியை சமாளித்து வீழ்த்தி விட்டது.

இதையும் படிங்க : கிரிக்கெட்டின் கடவுள்னு சொன்ன சச்சினுக்கு எதிராகவே நான் அதை செய்திருக்கேன் – சோயப் அக்தர்

எனவே நிச்சயம் இந்த மூன்றாவது போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி தான் வெற்றி பெறும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement