நீங்க வேனா பாருங்க. இந்த தொடரில் இந்த 5 சின்ன பசங்களும் அசத்துவாங்க – பட்டியல் இதோ

Jaiswal
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Dubai

- Advertisement -

அனைத்து அணிகளும் இந்த ஐ.பி.எல் தொடருக்காக மிகதீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடர் குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் அளித்து வருகின்றனர் அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட இருக்கும் ஐந்து இளம் வீரர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுவரை 12 முறை நடைபெற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக மும்பை அணி 4 முறையும், சென்னை அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்ற உள்ளன. மேலும் இதுவரை கோப்பையை கைப்பற்ற அணிகளான பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகள் இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்ற மும்முரம் காட்டும் என்று தெரிகிறது.

Chopra

அதே போன்று அவர்கள் தேர்வு செய்த உள்ள இளம் வீரர்களும் அதற்கேற்றார்போல சிறப்பாகவே தேர்வு செய்து ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள அந்த ஐந்து இளம் வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் விளையாடும் அணிகள் விவரம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன :

- Advertisement -

jaiswal 1

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வல் – ராஜஸ்தான் ராயல்ஸ் (இடதுகை பேட்ஸ்மேன்)

2) ரவி பிஷ்நோய் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சுழற்பந்து வீச்சாளர்)

- Advertisement -

3) விராட் சிங் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பேட்ஸ்மேன்)

4) ரியான் பராக் – ராஜஸ்தான் ராயல்ஸ் (பேட்ஸ்மேன்)

5) தேவ்தத் படிக்கல் – ஆர் சி பி (பேட்ஸ்மேன்)

Advertisement