நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டாவதாக பஞ்சாப் அணி விளையாடியது. அப்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்காக கே.எல் ராகுல் கடுமையாக போராடினார். அவர் ஜடேஜாவின் ஒரு பந்தினை ஸ்வீப் செய்து ஓடினார். அந்த பந்தை துரத்திய தோனி ஸ்டம்பை பார்க்காமலே பின்னால் இருந்தே த்ரோ செய்து ஸ்டம்பில் அடித்தார். ஆனால், பைல்ஸ் விழாததால் அவுட்டிலிருந்து தப்பினார் ராகுல். தோனியின் இந்த த்ரோ தோனியின் ரசிகர்களால் அதிகஅளவு பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ :
Déjà vu – Dhoni creates magic, but bails still don’t fall https://t.co/ZrzUIbH4Yh via @ipl
— Siva.k (@sivakubendiran) April 7, 2019
ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.
அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.