நாளை மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக இந்த வருடத்தின் முதல் ஐபில் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் கடந்த 16 ஆம் தேதி சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது. இந்நிலையில் சென்னை அணி ரசிகர்கள் இன்றிலிருந்தே மைதானத்தில் போட்டியை கொண்டாட துவங்கி விட்டனர். அவர்களின் கொண்டாட்டத்தால் மைதானம் இன்று அதிர்ந்தது. இதோ அந்த வீடியோ :
Trailer version of the Whistles at the #AnbuDen! Await the main picture tomorrow! #WhistlePodu #Yellove ????????@CSKFansOfficial pic.twitter.com/WL2dvxfufh
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2019
தோனி என்றாலே சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தை பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய தேவையில்லை. அந்த அளவிற்கு சென்னை ரசிகர்கள் தோனியின் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அதேபோல் தோனியும் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு அடுத்து தமிழ்நாடும், சென்னையும் தான் எனது இரண்டாவது வீடு என்று பல இடங்களில் தெரிவித்துள்ளார்.
இந்த வருட கோப்பையினையும் தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்ற வருடம் வயதானவர்களை கொண்ட அணி என்று கேலி செய்யப்பட்ட சென்னை அணி அனைவர்க்கும் அதிரிச்சி அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.