நடந்து வரும் ஐபில் போட்டியில் பஞ்சாப் ஆணியில் ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸின் கடோர்கஜன் கெயில் தற்போது சற்று கேரள மண்ணில் ஓய்வெடுத்து வருகிறார். நடந்து முடிந்த ஐபில் போட்டிகளில் அதிரடியாக ஆடி வரும் கெயில் தந்து மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு சிறு வெகேஷனில் இருந்து வருகிறார்.
தற்போது கேராவில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் தாங்கிவருகிறார் கெயில்.அவர் அந்த ஹோட்டலில் தங்கி இருப்பதை அறிந்த பிரபல செய்தி தொலைக்காட்சியான IAN அவரை பேட்டியெடுக்க அங்கே சென்றுள்ளது. ஆனால் அந்த ஹோட்டல் நிர்வாகம் கெயில் தற்போது அவருடைய தனிப்பட்ட விஷயத்திற்காக குடும்பத்துடன் வந்துள்ளதால் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்து விட்டதாக கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டது.
நேற்று முதல் அந்த ஹோட்டலில் தங்கி வரும் கெயில் இன்னும் ஒரு சில நாட்கள் அங்கு தங்கி வருவார் என்று அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கேரளாவில் படகு சவாரி,ஆயில் மசாஜ், மீன் பிடித்தல் என்று தனது குடும்பத்துடன் குதூகலமாக இருந்து வருகிறாராம் கெயில்.
Raviz Ashtamudi Mahayana House Boat selfie with local fishermen. @henrygayle #Raviz #Ashtamudi pic.twitter.com/NaDUFHRBqd
— Raviz Hospitality (@raviz_xperience) April 30, 2018
மேலும் கெயில் வரும் 3 ஆம் தேதி தான் கேரளாவில் இருந்து கிளம்புவார் என்று தெரியவந்துள்ளது. எனவே வரும் 4 ஆம் தேதி பஞ்சாபி அணி மும்பையுடன் மோத உள்ளது. எனவே அந்த போட்டியில் கேரளாவிற்கு சுற்றுலா சென்று புத்துணர்ச்சியுடன் திரும்பும் யானை போல அந்த போட்டியில் கெயில் ஆடுவார் என்று எதிர்பாராக் படுகிறது.