இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளாக நேற்று தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்குவது ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 49 ரன்கள் குவித்தார்.
அவரைத்தவிர ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி 118 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களிலும், அக்சர் படேல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் வெற்றிக்கான வாய்ப்பு சற்று அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின்போது அதிரடியாக விளையாடி சதம் அடித்த பண்ட் இங்கிலாந்து அணியை தனியாளாக அதல பாதாளத்தில் தள்ளினார் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்த இந்திய அணி 205 ரன்கள் அடிக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினார்.
இந்நிலையில் பண்ட் விளையாடிய இந்த சிறப்பான இன்னிங்சிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பண்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : என்ன ஒரு சிறப்பான ஆட்டம், நெருக்கடியான சூழ்நிலையில் இறங்கி நம்ப முடியாத வகையில் விளையாடி இருக்கிறார். இது அவருக்கு முதல் தடவையாகும் கிடையாது அதே போன்று இதுவே அவருக்கு கடைசி முறையும் கிடையாது.
How good is he? Unbelievable..what a knock under pressure…not the first time and won’t be the last time..will be an all time great in all formats in the years to come.keep batting in this aggressive manner .thats why will be match winner and special..@bcci @RishabhPant17 pic.twitter.com/1cRmnSw5ZB
— Sourav Ganguly (@SGanguly99) March 5, 2021
வரும் காலங்களில் இனி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இவர் சிறப்பாக விளையாடுவார் இதேபோன்று அதிரடியான வகையில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும். அதனால்தான் இவர் ஒரு ஸ்பெஷலான வீரர் மேட்ச் வின்னர் என்று கங்குலி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மூன்றாம் நாளில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்கள் குவித்துள்ளது. இதனால் 160 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.