மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.
இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடருக்கான கேப்டனாக கோலி அறிவிக்கப்பட்டவுடன் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறியதாவது : கோலியை ஏன் கேப்டனாகவும் தேர்வு செய்தீர்கள் உலகக் கோப்பைத் தொடரோடு அவருக்கு கேப்டன் பதவி முடித்திருக்க வேண்டும் என்பது போல நேரடியாக கோலிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது கவாஸ்கரின் இந்தக் கருத்துகளுக்கு இந்தியாவின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன்படி அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது :
Respectfully disagree with Gavaskar Sir with his views on Indian selectors & Virat being retained as capt. No, Ind did not put in a ‘much below par WC performance’, they won 7 lost two. Last one very narrowly. And integrity a far more important quality as selector than stature.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) July 29, 2019
கவாஸ்கர் அவர்கள் இந்திய தேர்வு குழுவினர் மற்றும் விராட் கோலி குறித்து கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்திய அணி உலகக்கோப்பையில் சிறப்பாகவே ஆடியது 9 போட்டிகளில் 7 போட்டிகளில் நாம் வெற்றி பெற்றோம். மேலும் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றிக்கு அருகிலேயே சென்று நாம் தோற்றம். இதனால் தேர்வு குழு முடிவுசெய்த கோலியின் கேப்டன்சி சரியான ஒன்றுதான் என்று மஞ்சரேக்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.