IND vs IRE : பும்ரா மட்டுமல்ல மேலும் 2 இந்திய வீரர்களுக்கு நாளைய போட்டியில் ஓய்வு – அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

Prasith-Krishna
- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

IND-vs-IRE

- Advertisement -

இதன் காரணமாக நாளைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் பும்ரா பணிச்சுமை காரணமாக நாளைய போட்டியில் ஓய்வு எடுக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் பும்ராவோடு சேர்த்து மேலும் சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு சில வீரர்கள் அணியில் இடம் பெற்று தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளதால் சில வீரர்களுக்கு வாய்ப்புக்கு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

Jitesh-Sharma

அந்த வகையில் சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக தனது அறிமுக வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஜிதேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில தொடர்களாக இந்திய அணியில் இடம்பிடித்து வெளியில் அமர்ந்து வரும் அவருக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லா உலக கோப்பையும் ஜெயிக்க முடியாது தான் ஆனா அதை செய்யலாமே – இந்திய அணிக்கு கங்குலி கோரிக்கை

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக முகேஷ் குமார் விளையாட வாய்ப்புள்ளது. மேலும் பும்ரா ஓய்வு எடுக்க உள்ளதால் அவரது இடத்தில் ஆவேஷ் கான் விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement