- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹார்டிக் பாண்டியாவின் குழந்தையை கையில் வைத்திருக்கும் ஸிவா தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவருடைய மகள் ஸிவா தோனிக்கும் ரசிகர்கள் இருப்பது உண்மை என்று நாம் கூறலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் பிரபலமான ஒரு முகமாக ஸிவா தோனி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது தோனியின் மனைவி சாக்ஷி ஸிவா தன் கையில் ஒரு குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இந்த குழந்தை யாருடையது என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தை சாக்ஷி பகிர்ந்து உள்ளதால் உடனடியாக இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பேசு பொருளாக மாறியது.

- Advertisement -

மேலும் பலரும் இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தையை குறித்து ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா ? என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி இன்னும் சிலர் பாண்டியா குடும்பத்திற்கு தோனி நெருக்கமானவர் என்றும் எனவே நிச்சயம் அவர்கள் பாண்டியாவின் வீட்டிற்கு சென்று அவரது குழந்தையை சந்தித்திருக்க சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே ஸிவா தோனி பாண்டியாவின் குழந்தையை கையில் வைத்திருக்கிறார் என்பது போலவும் சிலர் யூகித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் அவர் கையில் வைத்திருக்கும் அந்த குழந்தை யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும் அந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை பிறந்து சில நாட்களே ஆன குழந்தை போன்று இருப்பதால் நிச்சயம் பாண்டியாவின் குழந்தையாகத்தான் இருக்கும் என்று கூறி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by