அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்யாக்க மாட்டேன் – யுஸ்வேந்திர சாஹல் சபதம்

Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக அங்கு சென்றுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட ஒரு புதிய அணி தற்போது இலங்கை சென்றுள்ளது.

dravid

- Advertisement -

இந்த புதிய அணியின் கேப்டனாக தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் செயல்பட இருப்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதில் எத்தனை பேர் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என்றும் அவர்களது திறமை எவ்வாறு இருக்கப் போகிறது என்றும் பலரும் அதனை பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த இலங்கை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகல் கூறுகையில் : நான் நிச்சயம் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவேன். யாராலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது எதிர்வரும் இலங்கை தொடரில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு முக்கியமான தொடர்.

Chahal

எனது பந்துவீச்சில் உள்ள குறைகளை சரிசெய்து நான் மீண்டும் இந்திய அணிக்கு பலமாக திரும்புவேன். ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டாலும் என்னை நம்பி அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோர் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகின்றனர். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் பொய்யாக்க மாட்டேன்.

Chahal

டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து நான் இந்த தொடரில் விளையாட மாட்டேன். இப்போதைக்கு இலங்கை தொடரில் சிறப்பாக பந்து வீச வேண்டும் அது மட்டுமே எனது குறிக்கோள். அதன்பிறகு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும் என சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement